விட்ட இடத்தை பிடிச்சுடுவேன் - வடிவேல் காமெடி
சினிமாவில் காமெடி பண்ணுவது என்பது சாதாரண விஷயமல்ல... படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் அவர்களை சிரிக்க வைக்க வேண்டும்.
சாதாரணமாக வசனங்களை பேசுவதால் மட்டும் அனைவரையும் சிரிக்க வைத்திட முடியாது. அதற்கான தோற்றம், சமயத்திற்கேற்ற முகபாவனை மாற்றுவது, உடல்மொழி ஆகியனவை ஒன்றிணைந்திருக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவர் வடிவேலு.
நடந்த முடிந்த கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு சினிமா நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த வடிவேலு, மீண்டும் ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தின் மூலம் நடிக்க திரும்பியிருக்கிறார்.
இப்படத்தில் தெனாலிராமன், மன்னர் என்ற கேரக்டர்களில் நடிக்கிறார்.
இரண்டு கேரக்டருக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக, தனது Body Language - ஐ முழுவதுமாக மாற்றி நடித்திருக்கிறாராம்.
ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார்.
இவர்களுடன் மனோபாலா, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ஜோ மல்லூரி உள்ளிட்ட ஒரு காமெடி கூட்டமே நடித்திருக்கிறார்கள்.
இப்படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
அரங்குகளில் மட்டுமன்றி குற்றாலம், அச்சன்கோவில், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.
ஏற்கெனவே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இபோது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளதாம்.
எல்லா பணிகளும் முடிவடைந்துவிட்டதால் அடுத்தவாரம் படத்தை தணிக்கை சான்றிதழுக்காக அனுப்ப இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி படத்தின் இசைவெளியீட்டு விழாவையும், ஏப்ரல் 11ஆம் தேதி படத்தையும் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
AGS நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது. படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கியிருப்பவர் யுவராஜ்.
இரண்டாண்டுகளுக்கு மேலான நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து வடிவேலுவின் படம் வெளியாவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன.
நடிப்பை மட்டுமே பார்த்திருந்தால் வடிவேலுவின் சினிமா மார்க்கெட் எங்கோயோ போயிருக்கும்.
எல்லாம் வாயால் வந்த வினை...இந்த இடைப்பட்ட காலத்தில் இளம் காமெடியன்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து விட்டார் வடிவேல் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
எது எப்படியோ ஏப்ரல் மாதம் வெளியாகும் ஜெகதல புஜபல தெனலிராமன் மூலம் மீண்டும் வடிவேலு கலகலக்க வைத்து, விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடித்துவிடலாம் என்று நம்புகிறாராம் வடிவேல்.
சாதாரணமாக வசனங்களை பேசுவதால் மட்டும் அனைவரையும் சிரிக்க வைத்திட முடியாது. அதற்கான தோற்றம், சமயத்திற்கேற்ற முகபாவனை மாற்றுவது, உடல்மொழி ஆகியனவை ஒன்றிணைந்திருக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவர் வடிவேலு.
நடந்த முடிந்த கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு சினிமா நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த வடிவேலு, மீண்டும் ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தின் மூலம் நடிக்க திரும்பியிருக்கிறார்.
இப்படத்தில் தெனாலிராமன், மன்னர் என்ற கேரக்டர்களில் நடிக்கிறார்.
இரண்டு கேரக்டருக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக, தனது Body Language - ஐ முழுவதுமாக மாற்றி நடித்திருக்கிறாராம்.
ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார்.
இவர்களுடன் மனோபாலா, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ஜோ மல்லூரி உள்ளிட்ட ஒரு காமெடி கூட்டமே நடித்திருக்கிறார்கள்.
இப்படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
அரங்குகளில் மட்டுமன்றி குற்றாலம், அச்சன்கோவில், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.
ஏற்கெனவே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இபோது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளதாம்.
எல்லா பணிகளும் முடிவடைந்துவிட்டதால் அடுத்தவாரம் படத்தை தணிக்கை சான்றிதழுக்காக அனுப்ப இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி படத்தின் இசைவெளியீட்டு விழாவையும், ஏப்ரல் 11ஆம் தேதி படத்தையும் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
AGS நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது. படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கியிருப்பவர் யுவராஜ்.
இரண்டாண்டுகளுக்கு மேலான நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து வடிவேலுவின் படம் வெளியாவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன.
நடிப்பை மட்டுமே பார்த்திருந்தால் வடிவேலுவின் சினிமா மார்க்கெட் எங்கோயோ போயிருக்கும்.
எல்லாம் வாயால் வந்த வினை...இந்த இடைப்பட்ட காலத்தில் இளம் காமெடியன்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து விட்டார் வடிவேல் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
எது எப்படியோ ஏப்ரல் மாதம் வெளியாகும் ஜெகதல புஜபல தெனலிராமன் மூலம் மீண்டும் வடிவேலு கலகலக்க வைத்து, விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடித்துவிடலாம் என்று நம்புகிறாராம் வடிவேல்.
0 comments:
Post a Comment