"மலையாள" படங்களில் நடிக்கும் சுந்தர் சி.!
சுந்தர்.சி.யின் இயக்கத்தில் சமீபத்திய படங்களான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘அரண்மனை’, ‘ஆம்பள’ ஆகியவை தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது.
இவர் கடைசியாக இயக்கிய ஆம்பள படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால் தற்போது சுந்தர்.சி இயக்குவதை சிறிது காலம் தள்ளிவைத்து விட்டு மீண்டும் நடிப்பில் களம் இறங்கவுள்ளார்.
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வெல்லிமூங்கா’. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படத்தற்கு அதிக வசூல் ஆனது.
தற்போது இப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இதில் சுந்தர்.சி நாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை குஷ்புவின் அவனி சினி மேக்கர்ஸ் மூலம் தயாரிக்க இருக்கிறார்கள்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரத்தை விரைவில் வெளியிடவுள்ளனர்.
இவர் கடைசியாக இயக்கிய ஆம்பள படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால் தற்போது சுந்தர்.சி இயக்குவதை சிறிது காலம் தள்ளிவைத்து விட்டு மீண்டும் நடிப்பில் களம் இறங்கவுள்ளார்.
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வெல்லிமூங்கா’. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படத்தற்கு அதிக வசூல் ஆனது.
தற்போது இப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இதில் சுந்தர்.சி நாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை குஷ்புவின் அவனி சினி மேக்கர்ஸ் மூலம் தயாரிக்க இருக்கிறார்கள்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரத்தை விரைவில் வெளியிடவுள்ளனர்.
0 comments:
Post a Comment